Monday, February 15, 2010

இரு மிருகங்களின் கதையாடல்

உன் மிருகத்தை ஏவினாய்
ஒவ்வொரு இரவிலும்
அது வெற்றிபெறும் வேளையில்தான்
விழிக்கிறது என் மிருகம்.......

மோத யாருமற்ற களத்தில்
அதன் வெறிக்கு இரையாகிறது
என் விரல்.....
வெறுமையின் பிசுபிசுப்பில்
நிறைகிறது காலிடைக்களம்.......

2 comments: