புலிகள் பேசும் இரவு
எதற்குமே சமமற்ற
இரவின் நிழலில்
வரிகளற்ற புலி
என் உடல்மேல்
நகர்ந்தது.
உயிரின் விலை
உணவு என்றது
சிகப்பு சேலை உடுத்திய
பெண்ணின் உதிரம்
ருசியானது என்றது
மற்றும்
விளைவுகளை மட்டுமே
விதைக்க முடியும் என்றது
இருளின் உச்சத்தில்
சிரித்தபடியே நடந்து
மறைந்தது
அதன் வாலற்ற பின்புறம்
ஒரு
இரவு ராணியின்
பின்புறத்தை ஒத்திருந்தது...
இன்னும் இரவு
மிச்சமிருக்கிறது..........
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3034
நன்றி : உயிரோசை - உயிர்மை.