Tuesday, July 16, 2013

Royal Enfield - Classic 350 - Review - ராயல் என்பீல்ட் - கிளாசிக் 350 - 3000 கிலோ மீட்டருக்குப் பிறகு.



எல்லாக் குழந்தைகளையும் போல புல்லெட் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால் புல்லெட் ஒன்றை வாங்கி ஓட்டுவதற்கு எனக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டது. :(

ஒரு வழியாக கடந்த வருடம் ஜூலை மாதம் கருப்பு நிற ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 புல்லெட்- ஒன்றை அடையார் என்பீல்ட் ஷோரூமில் புக் செய்தேன். காத்திருப்புக் காலம் 8 மாதம் என்றார்கள். நான் பிப்ரவரியில் இருந்து ஒவ்வொரு வாரமும் போனில் பேசி நொந்து, போங்கடா நீங்களும் உங்க புல்லெட் வண்டியும் என்று கடுப்பாகிப் போய் விட்டுவிட்டேன். திடீரென 3 மாதம் முன்பு, அவர்களே என்னை அழைத்து பணத்தையும், ஆவணங்களையும் வாங்கிக் கொண்டு, 15 நாள் கழித்து வண்டியைக் கொடுத்தனர். 


வண்டியின் விலை : 128500/-
எக்ஸ்ட்ரா பிட்டிங் : 4000/- (அடிசனல் சைலென்சர், சேப்டி பார் - Crash Bar)



முதல் முறையாக ஒட்டிய போதே, அட அட அட. அந்த வண்டியின் சப்தம், மெருகு, சொகுசு என அனைத்தும் அருமை. வேறென்ன சொல்வது. அடுத்து 15 நாளில் 500 கிலோ மீட்டர் கடந்ததும் முதல் சர்வீஸ். 3 மாதத்தில் 3000 கிலோ மீட்டர் - இரண்டாவது சர்வீஸ். 
நல்லவை:
1. வண்டி ஓட்டுவதை நல்ல அனுபவமாகுவது.
2. கண்டிப்பாக முதுகு வலி வராது. (நான் இந்த வண்டியை இதற்காகவும் வாங்கினேன்)
3. வெறித்தனமாக வண்டி ஓட்டுபவர்களை நிதானத்திற்கு கொண்டுவரும். :)
4. பழைய புல்லேட்டுகளுடன்  ஒப்பிடும் பொது அதிர்வு குறைவு.
5. மோசமான சாலையிலும் வண்டியை எந்த யோசனையும் இல்லாமல் ஓட்டலாம்.
6. மைலேஜ் 40-43 தருகிறது. (நகருக்குள்)
7. பாதுகாப்பு. ( என் வண்டி வாங்கிய 5ம்  நாள் ஒரு ஆட்டோ மோதியது, என் வண்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை, ஆட்டோவின் ஒரு பகுதி நெலிந்து விட்டது :)).
8. வயதானவர்கள் கூட அமரும் படியான பில்லியன்.

அல்லவை:
1. காத்திருப்புக் காலம். சொன்ன தேதியில் கொடுப்பதில்லை.
2. சர்வீஸ் டெலிவரி மிக மோசம். ( 9 மணிக்கு போனால் 10 மணிக்கு வண்டியைத் தருவார்கள்).
3. வண்டியை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டம்.
4. தொடக்கத்தில் கியர் கொஞ்சம் பிரச்சனை செய்யும்.
5. டிஸ்க் ப்ரேக் கொஞ்சம் சத்தம் தருகிறது.
6. எகானாமிக் மக்கள் மைலேஜ் பற்றி யோசிக்கலாம். :(


மற்றபடி ஒரு மாதிரி நமக்குத் தன்னம்பிக்கை அளித்து, நிதானத்திற்குக் கொண்டுவருவதை கடந்த 3 மாதத்தில் உணர முடிகிறது.



அடுத்து ஒரு நீண்ட தூரப் பயணத்தைச் செய்துவிட்டு அந்த அநுபவத்தையும்  பதிய வேண்டும்.