Saturday, March 27, 2010

பதிவர் சங்க விவாதம் அல்லது பின்நவீனத்துவ பயிற்சிப் பட்டறை அல்லது..... கொய்யால ஏதோ ஒன்னு!

முதலில் பதிவர் சந்திப்பைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் ஸ் யப்பா முடியல............................

இன்றைய பதிவர் சந்திப்பிற்கு மாலை 6 .30 க்குப் போய்ச் சேர்ந்தேன். உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு மொக்கை மேட்டர் டைப் செய்யப் பட்ட பேப்பரைத் தந்தார். அப்போதே நான் உஷாராகி இருக்க வேண்டும். அதன் பின் ஒன்லி மொக்கை மற்றும் மொக்கையோ மொக்கை.

கருத்துக்குத்துக்களை இறக்குவதாக நினைத்து மட்டையடிக்கருத்துக்கள் சராமரியாக இறக்கப் பட்டன. விதிவிலக்கு சுகுணா திவாகர் மற்றும் நர்சிம். ஆ'ரம்பம்' முதலே காமெடிப் படம் பார்க்கும் உணர்வு. ஆளாளுக்கு என்று ஒரு கூட்டம் இருப்பதும் எங்கு எதற்காகக் கூடினாலும் கூட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நிரூபித்துக் கொண்டும் இருந்தனர். உண்மைத்தமிழன் பேசும்போது யாராவது நாம் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். ம்ஹீம்........இல்லையே..... ஆனா அவரும் சாதாரணப் பட்ட ஆளு இல்ல... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாரு. :) அநேகமா தானைத்தலைவரா அவரையே நியமிச்சுரலாம். அண்ணன் பைத்தியக்காரன் பேசிய பொது, எனக்கு இவர் தமிழ்ப்படம் போலக் கூட்டத்தைக் கலாய்க்கிறாரோ என்று நினைத்தால் உண்மையிலேயே மனுஷன் சீரியஸ்-ஆ பேசுறாரு. அந்த முன் அறிக்கையைப் படித்த எனக்கே இது ஆவாதுன்னு தெரிஞ்சு போச்சு. அண்ணே உங்களுக்குத் தெரியலையா? இல்ல உண்மையிலேயே கலாய்ச்சிங்களா? தனியாவாவது எனக்குச் சொல்லுங்க....... அப்புறம் சங்கம் சங்கம் என்று யாராவது சொல்லும் போதெல்லாம் எனக்குக் கைப்புள்ள வடிவேலும் அந்த இத்துப் போன வண்டியும் ஞாபகம் வந்து தொலைத்தது.
அப்புறம் ஞாநி........ வழக்கமாக அவர் சொல்லும் அறிவுரைகள், சட்டம், அனுபவங்கள்........ நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. மொத்த 1 .30 மணி நேரத்துல 1 மணிநேரம் பேசுனாரு. (அப்பிடித்தான் எனக்குத் தோன்றியது) அவரு சொன்ன விஷயம் எல்லாம் ஓகே. ஆனால் அபத்தமான ஒரு நாடகத்தில் இடம்பெறும் அறிவுரைக் கருத்துக்களைப் போல இருந்தது.
நான் என்ன கருத்துடன் சென்றேனோ அதே கருத்துக்களைச் சுகுணாவும் நர்சிமும் சொன்னார்கள். பிளாக் என்பது ஒரு கட்டற்ற பெருவெளி, அங்கே ஒரு சென்சாரைக் கொண்டுவருவதைப் போல பேசினார்கள் பலர். சார் என்னை இவன் கிள்ளீட்டான் சார்னு யாராவது சொன்னால் சங்கம் இறங்கிப் போராடி நடவடிக்கை எடுக்குமாம். இப்போதே யாராவது உங்களைப் பாதிக்கிற மாதிரி எழுதினால் அவர்களை முடக்க முடியும் எனும்போது கமிட்டி எதற்கு? தலைவர் எதற்கு?. யாருக்காவது உதவவேண்டும் என்றால் இப்போது செய்வதைப் போலவே ஒரு போஸ்ட் போடுங்கள். விரும்பியவர் தரட்டும்.இதில் சங்கம் என்ன செய்யப் போகிறது?. சங்கத்தின் பேரில் செய்வார்களாம்..... இப்போதும் வலைப்பதிவர் உதவி என்றுதானே சொல்லப்படுகிறது. எப்படியும் யாரையும் கட்டாயப்படுத்தி காசு/உதவி வாங்க முடியாது எனும் போது தலைவர் சங்கம் எல்லாம் என்ன செய்வதற்கு ?


அப்புறம் அரசாங்கத்தை எப்படி சந்திப்பது... :) இவர்கள் ஒருமுறை யாரையாவது சந்தித்தால் தெரியும் அந்தக் காமெடி.
ஒரு முறை தலைவராய் இருந்தவர் அடுத்த முறை பிளாக் உலகிலேயே இருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரண்டு வருடத்திற்கு முன் தீவிரமாக வலையுலகில் செயல்பட்டவர்கள் இப்போது இல்லை.இப்போது இருப்பவர்கள்? வலையுலகம் அதிகாரத்தை பரவலாக்கி இருக்கிறது. அதை மீண்டும் ஏன் சங்கத்தலைவர், செயற்குழு என்று ஓரிடத்தில் குவிக்க வேண்டும்?

ஒரு அமைப்பை விர்ச்சுவல் உலகில் தொடங்கி அதை ஒரு பகிரும் இடமாகப் பயன்படுத்துவதுதான் இந்நிலையில் சரியானதாக இருக்கும். இது நிச்சயம் வெற்றி பெறும்.. அதற்கு சிறுகதைப் பட்டறை, சிறுகதைப் போட்டி,சிங்கை நாதனுக்கு உதவியது, போலி விசயத்தில் உறுதியாய் இறுதிவரை நின்ற அண்ணன் உண்மைத்தமிழன் என்று பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு பொதுவான ப்ளாகில் எல்லாருடைய ப்ளாக், எழுதுபவரின் விருப்பம், வேலை - அவரால் அவரது பணி சார்ந்து உதவ முடியுமா? (உதா:- ப்ருனோ, செந்தழல் ரவி), பணி சாராத வேறு உதவிகள் செய்ய இயலுமா ( உதா:- நர்சிம், பைத்தியக்காரன்), அதற்கான நேரம், தொடர்பு எண், ஈமெயில்.... வலையுலக சந்தேகங்கள் (டெக்னிகல் பிரச்சனைகள்) தொடர்பான உதவிகள் செய்பவர்கள் போன்ற விபரங்களையும் , ஒரு பிரச்சனையின் தீர்வை பொதுவான அந்த பிளாக்-இல் பகிர்தல் என எவ்வளவோ செய்ய முடியும்.

இதைத்தாண்டி ஒரு நிறுவனஅமைப்பாக இதைத் தொடங்கினால் இன்றைய மொக்கைக் கூட்டம் போல ஒரு மொக்கை அமைப்பாக மாறும் சாத்தியங்கள்தான் அதிகம்.

இந்தக் கூட்டத்தினால் எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் :
டீயே குடிக்காத நான் இன்று டீ குடித்தேன் அது நன்றாக வேறு இருந்தது.
இப்படி ஒரு புத்தகக்கடை இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
இனிமேல் மான்கராத்தே செய்வதற்கு ஏதுவாக கதவின் அருகே இடம்பிடிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். (பல சீனியர்கள் மான்கராத்தெயில் ப்ளாக் பெல்ட் வாங்கி இருப்பதையும் இன்றுதான் பார்த்தேன் - இப்படி எத்தனை கூட்டத்த நாங்க பார்த்திருப்போம் - ஒரு மான் மாஸ்டர் ) :)
நிறைய ப்ளாக்கர்கள் கதைசொல்லிகளாக இருப்பதும் தெரிய

வந்தது.
எல்லாவற்றையும் விட இந்தப் பதிவை இரவு 12 .30 க்கு டைப் செய்வது.....

மற்றும்

கூட்டம் என்றால் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என்ற நவீனத்துவக் கூற்றைக் கட்டுடைத்து பின்நவீனத்துவ ரீதியில் ஒரு கூட்டத்தை நடத்துவது எப்படி என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியவர்களுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி.


படித்ததில் பாதித்தது

எனக்கு வினவு தளத்தின் மேல் பல விமர்சனங்கள் உண்டு என்றாலும்,
இந்தக் கட்டுரை என் மனதின் அடி ஆழம் வரை பாதித்து இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய கட்டுரை / அல்லது உலகிற்கான கடிதம்......

http://www.vinavu.com/2010/03/26/women-sankari/

சகோதரி சங்கரிக்கு ஒரு செவ்வணக்கம் ...........

Monday, March 8, 2010

நிசப்தத்தின் ரயில்

மாநகரத்தின் ரயில்
மெதுவாக நகர்கிறது
முதல் வகுப்பில்
ஒரு கிழவன் பிச்சை
கேட்கிறான்
பலர் பாட்டைக் கேட்கிறார்கள்
ஒரு பெண்ணின் அடிவயிற்று வலி
கண்ணீராகிறது
ஒரு குழந்தை தூங்கி வழிகிறது
பிக்பாக்கெட் யாருமில்லை

நிகழ்வற்ற நிலையில்
நிகழும் எல்லாம்
நிகழ்வுகளாக
உறைகின்றன
என் நினைவின் பக்கங்களில்.