Friday, February 26, 2010

ரத்தம் வளர் போதி

முடிச்சுகளின் முடிவில்
வாழ்வின் பெருங்கதவைத் திறந்தான்
புத்தன்.

விரைகளற்ற ஆண்கள்
முலைகளற்ற பெண்கள்
மனித ரத்தத்தில்
பெருத்து வளர்கிறது
போதி.

சிரிப்பற்ற புத்தனிடம்
எஞ்சியது
பலரும் புணர்ந்த
இதழற்ற தாமரை.

விரை அறுக்க விரைகிறான்
ஒருவன்
புத்தனும் தமிழன்தான் என்று.

புத்தனுக்குத் தெரியும்
அவனும் இன்னொரு
புத்தன் தான் என்று.

No comments:

Post a Comment