Monday, March 8, 2010

நிசப்தத்தின் ரயில்

மாநகரத்தின் ரயில்
மெதுவாக நகர்கிறது
முதல் வகுப்பில்
ஒரு கிழவன் பிச்சை
கேட்கிறான்
பலர் பாட்டைக் கேட்கிறார்கள்
ஒரு பெண்ணின் அடிவயிற்று வலி
கண்ணீராகிறது
ஒரு குழந்தை தூங்கி வழிகிறது
பிக்பாக்கெட் யாருமில்லை

நிகழ்வற்ற நிலையில்
நிகழும் எல்லாம்
நிகழ்வுகளாக
உறைகின்றன
என் நினைவின் பக்கங்களில்.

No comments:

Post a Comment