Sunday, October 25, 2009

ஏதிலிப்பெண்ணின் நான்கு நாள் கவலை!

ஏதிலிப்பெண்ணின் நான்கு நாள் கவலை!

அண்ணன் முண்டமானான்
இறுதி நகர்வில்.
தம்பிக்கு ரத்தம் சிவப்பானது மட்டுமல்ல....
என்று புரிந்து போனது...
அம்மாவுக்கு விசர்..
அக்காவின் மரணம் இரவுக்குள் வரலாம்...

ரத்தம் எனக்கு புதிதில்லை...
ஆர்மிக்காரன் அடிச்சதில்
நிற்காமல் கசகசக்கிறது
காலிடை....

நாளைக்கு தண்ணீர் வருமாம்!
நாலுநாள் ரத்தக்கறையை கழுவ
அந்த தண்ணீர் போதுமா என்ற
கவலை மட்டுமே
மிச்சமிருக்கிறது....

No comments:

Post a Comment