Thursday, July 3, 2014

மீன்கள் வாழும் படகறை

மீன்கள் வாழும் படகறை 
கொஞ்சமும் மிச்சமற்ற 
வாழ்வொன்றை வாழ்வது 
பற்றிப் பேசியபடியே 
வாழ்ந்து 
வாழ்ந்தபடியே பேசி 

இரவொன்றின் தனிமையில் 
ஏதொன்றும் அற்ற 
கணத்தில் 
காமமே வாழ்வென்றும் 
இடை நீளும் வாளும் 
அது பொருதும் 
நிகழ்வோன்றே 
வாழ்வும் ஆன
பொழுதொன்றில் 
வாழ்வென்பது -

மீன்கள் உறங்கும், 
எரிந்தும், மூழ்கியும்,
பாசமேறியும்   இற்ற  
ஒற்றைப்  படகு.

No comments:

Post a Comment