Thursday, July 3, 2014

குதிரைக் கறியும் மற்றதும் - கவிதை

குதிரைக் கறியும் மற்றதும்

இருவேறு கறியில் செய்த 
உணவொன்றைத் 
தேடினேன்.

தேவை
நீண்ட குழல்க் கறி - குதிரையின் உடல்.
மற்றது - அதுவல்ல.

தீராஉரையாடலின் முடிவில்
நாட்பட்ட முட்டை வாசத்துடன் 
எதுவோ 
பரிமாறப்பட்டது.
ஆனால்,
அது 
கெட்டுப் போனதல்ல.

உண்ணும் போது
குறிப்பொன்று அதன் எலும்பில்
நிரடியது,

குறிப்பு-
வேறெவருக்கும், 
அதைத்
தரமுடியாதென்றும், 
உண்ட பின் 
எஞ்சும் அது 
பின் 
யாராலும் உண்ணப்படும்,
அவ்வாறே அது 
இப்போது
என்னிடமும் என்றும்.

நான் குறிப்புகளை 
ரசிப்பவன் அல்ல.

குதிரையின் வாசத்துடன் 
குழல்க்கறி வேண்டும் என்றேன்,
அதன் ருசி, பெயர்தான் அன்றி 
வாசம் அல்ல
என்பதாய்ச் சொல்லப்பட்டது.

கலக்கப்பட்ட மற்றொரு கறி
வாசமும், ருசியும் அற்ற
கிழட்டுக் கழுதையின் 
முன்பக்கக் கறியல்லாது 
வேறென்ன?

சந்தி வேளையில் 
கிழவிலங்கின் நிணம் வழிய 
ஒரு பகுதி 
குதிரையாய் மாறிய
என்னை 
உண்ணும் 
உன்னைக் காண்பேன்.

பின்
உன்னை 
நான் 
உண்பேன்.

No comments:

Post a Comment