Tuesday, October 26, 2010

கனவுகளின் பயணி


கடவுளின் கனவில் நானிருந்தேன்.

அவன் /அவள்/அது அல்லது
கடவுள் என்பதாய்
எழுதி இருந்தது
அவரின் முகவரி.

கடவுள் தன் இறப்பை
சற்றே தள்ளி வைத்தார்.......
தன் கேள்விக்களுக்குப் பதில் என்ன?
என்றபடி பிரபஞ்சத்தைத் தூங்க வைத்தார்.

கேள்விகள் எல்லாம் செத்துப் போன ஒரு தருணத்தில்
பதில்களெல்லாம் உயிர் பெற்றுப் பறந்தன.
பறக்கும் பதில்களில்
சில கடவுளின்
முகத்தில் உமிழ்ந்தன......
சில எச்சமிட்டன.....

கடைசியாய் நான் எப்படித்தோன்றினேன் ?
என்ற கேள்வியுடன் கடவுள் இறந்து போனார்
எல்லாப் பதில்களும் கடவுளின் அழுகிய
உடலைத் திண்ணத் தொடங்கின....

அவரின் கடைசிக் கேள்வி மட்டும்
கனத்த கழுகாய்
பிணத்தைச் சுற்றி வருகிறது.

மற்றொருவனின் கனவில்
வாழ்வதைப் பற்றிய
என் நினைவுகள்
வளரத்தொடங்கியது
கழுகின் நிழலில்....

ஒற்றை மரம் கொண்ட
பெருத்த வனமாய்.

No comments:

Post a Comment