Thursday, February 18, 2010

கவிதை அல்லது அது போல ஏதோ ஒன்று

காமவாசம்

யாருமற்ற ரயில் நிலையத்தில்
எப்போதாவது நின்று செல்லும்
ரயிலுக்காகக் காத்திருக்கிறேன்.

கசங்கி
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூவின்
மணத்தில் ஒளிந்து கிடக்கிறது
உடலை விற்ற ஒருத்தியுடன்
மனதைத் தொலைத்த ஒருவன் பேசிய
சொற்களற்ற உரையாடல்.....

நிழலற்றவன்

வெயில் வழியும் நடுச்சாலையில்
நிர்வாணமாய் நிற்கிறேன்.
என் நிழலைக் காணோம் என ஒதுங்கிச்செல்கின்றனர்
முகமற்ற பலர்.
மூளையின் மறத்த பக்கங்களில்
ஒளிந்திருக்கிறது என் நிழல்.

2 comments:

  1. //உடலை விற்ற ஒருத்தியுடன்
    மனதைத் தொலைத்த ஒருவன் பேசிய
    சொற்களற்ற உரையாடல்.....

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. நன்றி ரஷிதா.... மீண்டும் வருக.

    ReplyDelete